மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தமிழிலக்கியத்தை தமிழ்ப்பள்ளிவழி வந்த மாணவர்களுக்குக் கற்பிக்க எடுத்துக்கொண்டுள்ள முயற்சி பாராட்டுக்குரியது. அதேவேளையில் உலகத் தமிழர்கள் ஏங்கித் தவிப்பதெல்லாம் தங்கள் பிள்ளைகளின் தற்போதைய நிலை நமது சிறந்த பண்பாட்டுக் கூறுகளை இழந்து ஒட்டுமொத்த இனத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும் விதத்தில் தாய்மொழிக் கல்வியைப் பயிற்றுவிக்க விரும்பாத பெற்றோரின் தொகை , பொருள் ஈட்டுவதில் மட்டுமே குறியாகவுள்ள அரசுகளின் தொகை உலகமெங்கும் பெருகி வருவதால் தாய்மொழியின் வழி நற்பண்புகளைக் கற்பிக்க அனைவருமே தவறிவிடுகின்றனர் . அவரவரின் தாய்மொழியின் வழி திருக்குறளை உலகமெங்கும் அனைத்து மக்களும் படிக்கும் விதத்தில் இணையப்பக்கத்தின் உதவியில் நம் தாய்மொழியில் - ஆங்கிலத்தில் திருக்குறளின் நற்பண்புகளைக் கற்பித்து உலகமக்களுக்கு மலேசியாவிலிருந்து அரசும் எழுத்தாளர் சங்கமும் இணைந்து வழி காட்டுவோம் !
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அறிய செயல் - திருக்குறள்- 489
Sunday, March 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment