திருவள்ளுவராண்டு ௨௦௪௧ (கிபி ௨௦௰) முதல் அனைத்து நாடுகளிலுமுள்ள தமிழ்ப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆளுக்கொரு திருக்குறள் நூலை வாங்கிக் கொடுத்து பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இதன்வழி மாணவர்கள் தங்கள் தாய்மொழி எது என்பதையும் தங்களுக்குரிய தமிழ்ப்பண்பாடு என்ன என்பதையும் சில நாட்களுக்குள்ளேயே உணர்ந்துகொள்வார்கள் .
ஒரு தமிழ்மாணவரின் கையில் உள்ள திருக்குறள் நூலை தமிழ் மாணவருடன் அப்பள்ளிக்கு வரும் மற்ற மாணவர்களும் காண நேர்ந்தால் உலக மாந்தர் அனைவரும் படித்துப் பின்பற்ற வேண்டிய உண்மைகள் அன் நூலில் இருப்பதை உலக மக்கள் அனைவரும் அறிந்து அன்புள்ளம் கொண்டவர்களாக மாறுவதற்கு நாம் முன்மாதிரியாக விளங்க முடியும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment