"அகரம் " என்ற எழுத்து , எல்லா உயிர்மெய் எழுத்திலும் இறைந்து இருப்பதைப்போல இறைவன் உலகனைத்தும் உள்ள எல்லா உயிரிகளிலும் இறைந்து இருக்கின்றார். ஆகவே, என் உயிரிலும் இறைவன் இணைந்து இருக்கின்றார்" என நாம் முதல்குறளின் பொருளை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் . இதன் பிறகுதான் முன்றாவது திருக்குறளை படித்து மேற்காணும் கருத்துகளோடு ஒப்பிட்டுப் பார்த்து முன்றாவது திருக்குறளின் பொருளை மிகமிகைச்சரியாக; அதாவது , நம் தாயின் கருவறைக்குள் நம் உயிர் இடம் பெறும்போதே இறைவனும் இணைந்து இடம்பெறுகிறார் ' என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் . இதுதான் ஆசிரியர்களுக்கு உரிய அறிவு ! முதல் திருக்குறளின் பொருள் இரண்டாவது திருக்குறளைப் படித்தபின் மிண்டும் முதல் திருக்குறளை ஆய்வு செய்யவேண்டும் . ஆய்வு செய்தால் ஒவ்வொரு உயிரியிலும் இறைவனும் இணைந்திருக்கின்றார் என்ற உண்மை மாணவர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும் ; இப்போது இவுண்மை இவர்களுக்குத் தெரியாது .
இறைவன் தன் இதயத்தில் இருப்பதை மாணவர் மாணவிகள் உணர்ந்துகொண்டால் அந்த வினாடிமுதல் அவர்களுக்காகவே அம்மா அப்பாவைத் தந்ததுபோல அவர்களுக்காகவே ஆசிரியர்களைத் தந்தது போலவே ஆசிரியர்கள் அவர்களுக்குக் கற்பிக்க திருவள்ளுவரைக் கொண்டு
No comments:
Post a Comment