Thursday, April 9, 2009

இருபத்து ஆண்டுத் திட்டம் ஒன்றை தமிழர்கள் உலகமெங்கும் உருவாக்குவோம்!

உலகில் எங்கு நோக்கினும் மக்கள் அமைதியாக வாழ முடியவில்லை . இதற்கு என்ன காரணம் ? பணம் ! பணம்தான் இன்று எல்லாவற்றையும் தீர்மானம் செய்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்கு இருபது ஆண்டுகள் கண்டிப்பாக நம் பிள்ளைகளுக்கு நாம் கற்பிக்க வேண்டிய நூல் திருக்குறள் ஒன்றுதான்.

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆளுக்கொரு திருக்குறள் நூலை திருவள்ளுவர் ஆண்டு ௨0௪௧ ஜனவரில் வாங்கிக் கொடுத்து பள்ளிகளிலும் இல்லங்களிலும் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து அனைத்து நாடுகளிலும் உள்ள நம் சமுதாயத் தலைவர்கள் நம் சமுதாயத்தைச் சீர்திருத்த முன்வர வேண்டும்; பாதுகாக்க வேண்டும்.

இதற்கு,தமிழக அரசு தான் உலகத்தமிழர்களுக்கு முன்மாதிரியாக உலகத் தமிழர்களுக்கும் உணர்த்தும் வகையில் அதன் சட்ட நடவடிக்கைகளை முதலில் தமிழ்நாடு சட்டமன்றத்திலும் முறையாகப் பதிவு செய்யவேண்டும்.

திருவள்ளுவர் ஆண்டு ௨0௪௧ ஜனவரி முதல் சட்டமுறைப்படி தமிழரின் வாழ்வியல் நூல் திருக்குறள்தான் என்பதை உலகத்திற்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

Wednesday, April 8, 2009

தமிழக முதலமைச்சராக வருகின்றவர்களிடம் கேட்கின்றோம்...

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் முதலில் நடைமுறைப் படுத்தவேண்டிய ஒரு திட்டம். அதாவது, அதுவொரு புரட்சித்திட்டம். ஆம், முதல் வகுப்பு மாணவர்களுக்கு ஆளுகொரு திருக்குறள் புத்தகத்தை வழங்க வேண்டும்.

முதல் நாளிலேயே ஆசிரியர்கள் மாணவர்களின் கைகளிலுள்ள அப்புத்தகத்தை தமிழர்களின் வாழ்வியல் நூல் திருக்குறள்தான் என்பதைத் தெளிவாக விளக்கிச் சொல்லிவிட வேண்டும்.

இச்செயலானது அம்மாணவர்களை பண்புள்ள தமிழர்களாக மாற்றுவதுடன் தமிழக அரசு மேற்கொள்ளும் இத்திட்டத்தை உலக நாடுகளின் அரசுகளும் அந்நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் தமிழர்களின் பண்பாட்டு நூல் திருக்குறள்தான் என்பதயும் உறுதி செய்து கொள்வார்கள் ; தொடர்ந்து திருக்குறள் கற்ற தமிழ்ச்சமுதாயமாக தங்களையும் மாற்றிக்கொள்வார்கள். அரசும் அதற்கான உதவிகளைச் செய்ய முன்வரும்.

எதிர்வரும் திருவள்ளுவர் ஆண்டு ௨0௪௧ முதல் தமிழாக அரசின் செயல்திட்டமாக ஏற்று நடைமுறைப் படுத்துமாறு அடுத்து முதலமைச்சர் பொறுப்பை ஏற்கும் தமிழாக முதல்வரைக் காண திருக்குறள் கல்வி அறவாரியத்தின் குழுவினர் தமிழ்கம் செல்லத் திட்டமிடப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு உலகத்தமிழர்களின் அன்பான வேண்டுகோள்!

தமிழன் அரசு உலகத் தமிழர்களின் தமிழ்ப் பண்பாட்டை உறுதி செய்யும் நல்ல நோக்கத்தில் தமிழ் நாட்டிலுள்ள தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு முதல் வகுப்பில் கல்வி கற்கத் தொடங்கும் அன்றே ஒரு திருக்குறள் புத்தகத்தைக் கையில் கொடுத்து;
" இந்தப் புத்தகத்தில் இருப்பவைதான் நமது பண்பாடு . இப்புத்தகத்தை எப்போதும் உங்கள் கைகளில் வைத்துக்கொண்டே இருக்க வேண்டும் "

என "தமிழர் " என்பதற்கு நமக்குள்ள அடையாளமும் "தமிழ் மொழிதான் நம்மொழி என்பதற்கான உறுதிப்பாடும் "திருக்குறள்" நூல்தான் என சொல்லித் தந்துவிட வேண்டும்.

தமிழ்நாடு உட்பட உலக நாடுகளில் உள்ள தமிழின ஆசிரியர்களும் பெற்றோரும் தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு தம் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டுவர வசதியாக ஒரு மாணவருக்காவது இவ்வாறு சொல்லிக் கொடுத்ததை உறுதிப் படுத்தி ஒரு புகைப் படத்தோடு ஒரு நாள் இதழில் அச்செய்தியை வெளியிட்டு அச்செய்தியை ஒரு படியெடுத்து திருக்குறள் பணிக் கள கல்வி அற வாரியத்திற்கு , இம்முகவரிக்கு அனுப்புங்கள் .

திருக்குறள்


அறிவுடையார் எல்லாம் உடையார் ....

தமிழ்நாட்டுத் தமிழிர்களிடம் என்ன என்ன இருக்கிறதோ அவைகள்தான் உலகமெங்கும் வாழ்கின்ற தமிழ்மக்களிடமும் இருக்குமென எதிர்பார்க்க முடியும்.

தமிழ்நாட்டு அரசு, பள்ளிகளில் முறையாக "திருக்குறள் " என்ற ஒரு புத்தகத்தின் உதவியில் தன்னை ஒரு தமிழராகவும் , தன்னுடைய பண்பாடு அப்புத்தகத்தில் இருப்பதையும் ஒருமுறை ஆசிரியர்கள் மூலம் ஒவ்வொரு மாணவரும் உணரும்படி சொல்லித் தந்துவிட வேண்டும்.

தமிழ் நாட்டில் , இப்படி திருக்குறளை அரசே முன்னெடுத்துச் சொல்லித் தராதவரை , தமிழர்களின் பண்பாடு என்னவென்பதை , உலக நாடுகளின் அரசுகள் உறுதி செய்ய முடியாது. இசுலாமியர்களின் பண்பாட்டை - கிறித்துவர்களின் பண்பாட்டை உலக அரசுகள் அறிந்துள்ளன. ஆனால், தமிழ்ப் பண்பாடு என்னவென்பதை உலக நாடுகளில் வாழும் தமிழர்களால் சொல்ல முடியவில்லை ! ஏனென்றால் தமிழக அரசே இன்னமும் பள்ளிகளில் முதல் வகுப்பிலேயே திருக்குறள் புத்தகமொன்றை அரசே மாணவர்களுக்கு வழங்கி ஆசிரியர்களைக் கொண்டு அதைச் சொல்லித்தரத் தொடங்கவில்லை.

பிறந்தநாள் கொண்டாடும் தமிழ் மாணவர்களை முதலில் தேர்வு செய்வோம்!

எதிர்வரும் ௨0௧0 ஆண்டு முதலாக தமிழாக இம்முறை பொதுத் தேர்தலில் வெற்றிபெறும் தமிழக அரசு முதலில் தமிழகப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு திருவள்ளுவர் தினத்தில் ஆளுக்கொரு திருக்குறள் நூலை வழங்குவதை (கச்ட்டமரி லோ ) ஆக்கவேண்டும்.

அதாவது, தமிழன் தன் வாழ்வியல்நூல் எது ?; என்பதை, அவன் கல்வி கற்கும் பள்ளிதான் ஒரேஒருமுறை அவனுக்கு/அவளுக்கு தெளிவாகவும் உறுதியாகவும் திருக்குறளை அறிமுகம் செய்து வைக்க வேண்டும். இது கட்டாயம்.
அந்த அறிமுகம் தான் அவனை சமயங்களுக்கெல்லாம் அப்பார்ப்பட்டு முதலில் நான் ஒரு தமிழன் அதன் பிறகுதான் என் சமயம் என்னவென்பதை நான் எண்ணிப்பார்க்க வேண்டும் என்பதை அவன் படிப்படியாக உணர்வான்.

இதைச் செய்யாதவரை , ஒரு தமிழன் /தமிழச்சி தன் நாடும் தன் இனமும் பெருமைப்பட , தாம் நடந்து கொள்ள வேண்டிய முறை என்ன ? என்பதை அவர் அறிவார். இதை அறிய அவருக்குரிய நூலை அவருக்கு தமிழக அரசு இவ்வளவு காலமும் அறிமுகம் செய்யாமல் போனதால் , அறிவற்ற வழிகளில் செல்லத் துணிகின்றார்கள்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே!

நம்மக்களின் மரியாதையை உலகளவில் உயர்த்திய நூல் திருக்குறள் என்றால் அது மிகையில்லை . வேற்றினங்களை சேர்ந்த அறிஞர்கள் திருக்குறளைப் படித்துப் பயனடைகிறார்கள் ; ஆனால், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் திருக்குறள் படித்துப் பயன்பெறுவதை நம் இனத்தின் வழக்கமாக அரசின் வழி இன்னமும் மாற்றுவதற்கு நாம் முயற்சிக்க வில்லையானால் நாம் எவ்வளவுக்கு நம் பெருமைகளை நாமே மறந்துவிட்டோம் என்பதை நம் இனத்தலைவர்கள் இப்போதாவது உணர்ந்து திருந்த வேண்டுகிறேன் . தமிழரின் சமூகத் துறைகளை தலைமை தாங்கி வழி நடத்துவோர் திருக்குறளை தமிழ்ர்களின் வாழ்வியல் நூலாக, நாள்தொறும் திருக்குறள் படிப்பதை ஒரு இனத்தின் வழ்க்கமாக மாற்றியமைக்கும் ஒரு முறையை சட்டமாக்கி அது ஒரு (கச்ட்டமரி லோ ) வாழ்க்கைச் சட்டமாக ஆக்கியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அப்படி ஆக்கவில்லை ! தான் இப்படி உயர்ந்த நிலைக்கு வருவதற்கு திருக்குறளே காரணம்; என தன் புகழை திருக்குறளால் உயர்த்திக் கொள்வார்கள் . திருக்குறளால் மக்களும் உயர வழிகாட்ட மாட்டார்கள் !

Sunday, March 29, 2009

எய்தற்கு அரியது இயைந்தக்கால்..

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தமிழிலக்கியத்தை தமிழ்ப்பள்ளிவழி வந்த மாணவர்களுக்குக் கற்பிக்க எடுத்துக்கொண்டுள்ள முயற்சி பாராட்டுக்குரியது. அதேவேளையில் உலகத் தமிழர்கள் ஏங்கித் தவிப்பதெல்லாம் தங்கள் பிள்ளைகளின் தற்போதைய நிலை நமது சிறந்த பண்பாட்டுக் கூறுகளை இழந்து ஒட்டுமொத்த இனத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும் விதத்தில் தாய்மொழிக் கல்வியைப் பயிற்றுவிக்க விரும்பாத பெற்றோரின் தொகை , பொருள் ஈட்டுவதில் மட்டுமே குறியாகவுள்ள அரசுகளின் தொகை உலகமெங்கும் பெருகி வருவதால் தாய்மொழியின் வழி நற்பண்புகளைக் கற்பிக்க அனைவருமே தவறிவிடுகின்றனர் . அவரவரின் தாய்மொழியின் வழி திருக்குறளை உலகமெங்கும் அனைத்து மக்களும் படிக்கும் விதத்தில் இணையப்பக்கத்தின் உதவியில் நம் தாய்மொழியில் - ஆங்கிலத்தில் திருக்குறளின் நற்பண்புகளைக் கற்பித்து உலகமக்களுக்கு மலேசியாவிலிருந்து அரசும் எழுத்தாளர் சங்கமும் இணைந்து வழி காட்டுவோம் !
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அறிய செயல் - திருக்குறள்- 489