Wednesday, April 8, 2009
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே!
நம்மக்களின் மரியாதையை உலகளவில் உயர்த்திய நூல் திருக்குறள் என்றால் அது மிகையில்லை . வேற்றினங்களை சேர்ந்த அறிஞர்கள் திருக்குறளைப் படித்துப் பயனடைகிறார்கள் ; ஆனால், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் திருக்குறள் படித்துப் பயன்பெறுவதை நம் இனத்தின் வழக்கமாக அரசின் வழி இன்னமும் மாற்றுவதற்கு நாம் முயற்சிக்க வில்லையானால் நாம் எவ்வளவுக்கு நம் பெருமைகளை நாமே மறந்துவிட்டோம் என்பதை நம் இனத்தலைவர்கள் இப்போதாவது உணர்ந்து திருந்த வேண்டுகிறேன் . தமிழரின் சமூகத் துறைகளை தலைமை தாங்கி வழி நடத்துவோர் திருக்குறளை தமிழ்ர்களின் வாழ்வியல் நூலாக, நாள்தொறும் திருக்குறள் படிப்பதை ஒரு இனத்தின் வழ்க்கமாக மாற்றியமைக்கும் ஒரு முறையை சட்டமாக்கி அது ஒரு (கச்ட்டமரி லோ ) வாழ்க்கைச் சட்டமாக ஆக்கியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அப்படி ஆக்கவில்லை ! தான் இப்படி உயர்ந்த நிலைக்கு வருவதற்கு திருக்குறளே காரணம்; என தன் புகழை திருக்குறளால் உயர்த்திக் கொள்வார்கள் . திருக்குறளால் மக்களும் உயர வழிகாட்ட மாட்டார்கள் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment