எதிர்வரும் ௨0௧0 ஆண்டு முதலாக தமிழாக இம்முறை பொதுத் தேர்தலில் வெற்றிபெறும் தமிழக அரசு முதலில் தமிழகப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு திருவள்ளுவர் தினத்தில் ஆளுக்கொரு திருக்குறள் நூலை வழங்குவதை (கச்ட்டமரி லோ ) ஆக்கவேண்டும்.
அதாவது, தமிழன் தன் வாழ்வியல்நூல் எது ?; என்பதை, அவன் கல்வி கற்கும் பள்ளிதான் ஒரேஒருமுறை அவனுக்கு/அவளுக்கு தெளிவாகவும் உறுதியாகவும் திருக்குறளை அறிமுகம் செய்து வைக்க வேண்டும். இது கட்டாயம்.
அந்த அறிமுகம் தான் அவனை சமயங்களுக்கெல்லாம் அப்பார்ப்பட்டு முதலில் நான் ஒரு தமிழன் அதன் பிறகுதான் என் சமயம் என்னவென்பதை நான் எண்ணிப்பார்க்க வேண்டும் என்பதை அவன் படிப்படியாக உணர்வான்.
இதைச் செய்யாதவரை , ஒரு தமிழன் /தமிழச்சி தன் நாடும் தன் இனமும் பெருமைப்பட , தாம் நடந்து கொள்ள வேண்டிய முறை என்ன ? என்பதை அவர் அறிவார். இதை அறிய அவருக்குரிய நூலை அவருக்கு தமிழக அரசு இவ்வளவு காலமும் அறிமுகம் செய்யாமல் போனதால் , அறிவற்ற வழிகளில் செல்லத் துணிகின்றார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment