Wednesday, April 8, 2009

தமிழக முதலமைச்சராக வருகின்றவர்களிடம் கேட்கின்றோம்...

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் முதலில் நடைமுறைப் படுத்தவேண்டிய ஒரு திட்டம். அதாவது, அதுவொரு புரட்சித்திட்டம். ஆம், முதல் வகுப்பு மாணவர்களுக்கு ஆளுகொரு திருக்குறள் புத்தகத்தை வழங்க வேண்டும்.

முதல் நாளிலேயே ஆசிரியர்கள் மாணவர்களின் கைகளிலுள்ள அப்புத்தகத்தை தமிழர்களின் வாழ்வியல் நூல் திருக்குறள்தான் என்பதைத் தெளிவாக விளக்கிச் சொல்லிவிட வேண்டும்.

இச்செயலானது அம்மாணவர்களை பண்புள்ள தமிழர்களாக மாற்றுவதுடன் தமிழக அரசு மேற்கொள்ளும் இத்திட்டத்தை உலக நாடுகளின் அரசுகளும் அந்நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் தமிழர்களின் பண்பாட்டு நூல் திருக்குறள்தான் என்பதயும் உறுதி செய்து கொள்வார்கள் ; தொடர்ந்து திருக்குறள் கற்ற தமிழ்ச்சமுதாயமாக தங்களையும் மாற்றிக்கொள்வார்கள். அரசும் அதற்கான உதவிகளைச் செய்ய முன்வரும்.

எதிர்வரும் திருவள்ளுவர் ஆண்டு ௨0௪௧ முதல் தமிழாக அரசின் செயல்திட்டமாக ஏற்று நடைமுறைப் படுத்துமாறு அடுத்து முதலமைச்சர் பொறுப்பை ஏற்கும் தமிழாக முதல்வரைக் காண திருக்குறள் கல்வி அறவாரியத்தின் குழுவினர் தமிழ்கம் செல்லத் திட்டமிடப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment