Wednesday, April 8, 2009

அறிவுடையார் எல்லாம் உடையார் ....

தமிழ்நாட்டுத் தமிழிர்களிடம் என்ன என்ன இருக்கிறதோ அவைகள்தான் உலகமெங்கும் வாழ்கின்ற தமிழ்மக்களிடமும் இருக்குமென எதிர்பார்க்க முடியும்.

தமிழ்நாட்டு அரசு, பள்ளிகளில் முறையாக "திருக்குறள் " என்ற ஒரு புத்தகத்தின் உதவியில் தன்னை ஒரு தமிழராகவும் , தன்னுடைய பண்பாடு அப்புத்தகத்தில் இருப்பதையும் ஒருமுறை ஆசிரியர்கள் மூலம் ஒவ்வொரு மாணவரும் உணரும்படி சொல்லித் தந்துவிட வேண்டும்.

தமிழ் நாட்டில் , இப்படி திருக்குறளை அரசே முன்னெடுத்துச் சொல்லித் தராதவரை , தமிழர்களின் பண்பாடு என்னவென்பதை , உலக நாடுகளின் அரசுகள் உறுதி செய்ய முடியாது. இசுலாமியர்களின் பண்பாட்டை - கிறித்துவர்களின் பண்பாட்டை உலக அரசுகள் அறிந்துள்ளன. ஆனால், தமிழ்ப் பண்பாடு என்னவென்பதை உலக நாடுகளில் வாழும் தமிழர்களால் சொல்ல முடியவில்லை ! ஏனென்றால் தமிழக அரசே இன்னமும் பள்ளிகளில் முதல் வகுப்பிலேயே திருக்குறள் புத்தகமொன்றை அரசே மாணவர்களுக்கு வழங்கி ஆசிரியர்களைக் கொண்டு அதைச் சொல்லித்தரத் தொடங்கவில்லை.

No comments:

Post a Comment